ரயிலில் மோதி 2 மாடுகள் பலி
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று திங்கட்கிழமை (6) அதிகாலை சென்றுகொண்டிருந்த ரயிலில் மூன்று மாடுகள் மோதுண்ட நிலையில், இரண்டு மாடுகள் சம்பவ இடத்தில் இறந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், மற்றுமொரு படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானைக்கு அண்மித்த மஜ்மா நகர் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.