முச்சக்கரவண்டி குடை சாய்ந்ததில் ஒருவர் பலி - மூவர் காயம்
நேற்று (05) மட்டக்களப்பு கும்புருமுலையில் முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்ததில் அதில் பயணித்த ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய ககைதியா என்நும் ஆசிரியை மரணமடைந்துள்ளார் இவர் இரு பிள்ளைகளின் தாயாவார். மேலும் இவருடன் பயணித்த அவரது பிள்ளைகள் இருவரும் வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையிலும், முச்சக்கரவண்டியை செலுத்திய அவரது கணவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுளனர். மருதமுனையில் இருந்து ஓட்டமாவடிக்குச்செல்லும் போதே இந்த விபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.