Breaking News

ஜனநாயக பேராளிகள் கட்சியை ஈ.பி.டி.பி வரவேற்பு

புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளாக இருந்து, ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்துள்ள ஜனநாயக பேராளிகள் கட்சியின் நல்லெண்ண முயற்சி வரவேற்கத்தக்கது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார். அந்த வகையில், ஜனநாயகத்தன்மை குறித்து தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து அக்கட்சி தொடர்ந்து செயற்படுமென தான் நம்புவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களது உரிமைகள் வெல்லப்படவும், வாழ்வாதாரங்கள் சீராக்கப்படுவதற்கு இக்கட்சி உழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன். ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து, இப்பேராளிகளின்; அரசியல் பிரவேசத்தை வரவேற்பதுடன், இதனூடாக முன்னேறுவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெருவித்துள்ளார்.