Breaking News

யானைகளின் வினோதப் பழக்கம்

யானைகளின் வினோதப் பழக்கம்

நமக்கு பிடித்தமான உயிரினங்களில் ஒன்று யானை. பொதுவாக 90 முதல் 200 ஆண்டுகள் வரை யானைகள் உயிர் வாழக் கூடியது. சில யானைகளின் தந்தங்கள் சுமார் 90 கிலோ எடை வரை இருக்கும். கிட்டத்தட்ட 5 மீட்டர் நீளம் வரை வளரும். 

யானைக்கு இவ்வளவு பெரிய உடல் இருந்தாலும் நன்றாக நீரில் நீந்தும். நாலரை மீட்டர் ஆழத்திலும் நீந்தி செல்லும். மனிதன் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவு நேரம் யானையாலும் இருக்க முடியும். 

யானை மூச்சு விடுவது தும்பிக்கையால் தான் என்றாலும் வாசனை அறிவது வாயினால்தான். யானைக்கு வாசனை அறியும் நரம்புகள் அங்குதான் இருக்கின்றன. துதிக்கையால் பெரிய மரத்தையும் சாய்த்துவிடும் வலுவான தசைகளை பெற்று இருக்கிறது.

யானைகளிடம் விசித்திரமான பழக்கங்கள் உள்ளன. காட்டில் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். சண்டையின் போது களைப்பாக இருந்தால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளும். சிறிது நேரம் மேயும், தண்ணீர் குடிக்கும். பின்பு மீண்டும் சண்டையைத் தொடரும். இப்படியே பல நாட்கள் நீடிக்கும். 

ஆசிய யானைகள் படுத்து புரள்வது உண்டு. ஆப்பிரிக்க யானைகளோ எப்போதும் படுப்பதில்லை. நின்று கொண்டேதான் தூங்கும். யானை என்று படுக்கிறதோ அன்று அதன் மரணம் நெருங்கி விட்டது என்று அர்த்தம். யானைப் படுத்தால் அது மரணப்படுக்கை தான். 

யானை மணிக்கு 32 கி.மீ. வேகத்தில் ஓடும். எல்லா யானைகளுமே கிட்டப்பார்வை உடையவை. தொலைவில் உள்ள காட்சிகளை பார்க்கமுடியாது. 

யானை பன்றி இனத்தை சேர்ந்தது. முதலில் தோன்றிய யானை பன்றி அளவே இருந்ததாம். ஆரம்பத்தில் நீண்ட மூக்காக இருந்து, பின்பு துதிக்கையாக வளர்ந்ததாம். 

இலங்கையில் உள்ள யானைகளில் ஆண் யானை, பெண் யானை ஆகிய இரண்டுக்குமே தந்தங்கள் கிடையாது. யானைக்கு துதிக்கை பலமானது என்றாலும், அதில் ஏதாவது காயம் ஏற்பட்டால் அவ்வளவுதான். அது குணப்படுத்த முடியாத அளவுக்கு சென்று, கட்டுக்கடங்காமல் பெரிதாகி விடும். 

யானையின் உடலில், துதிக்கை எட்டாத இடத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஒரு குச்சியை பிடித்து சொறிந்து கொள்ளும். யானையால் மற்ற விலங்குகளைப் போல் நான்கு கால்களால் தாண்ட முடியாது. நன்றாக பழகிய யானை, பாகன் சொல்லும் சில வார்த்தைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.