Breaking News

ஜனாதிபதியின் கருத்து கட்சியை பாதிக்கும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்ட கருத்துக்களை பொதுத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாடு தம்மிடமும் இருந்தது. எனினும் அது பின்னர் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அவருக்கு வழங்கப்பட்ட வேட்புமனு தொடர்பில் தமக்கு விருப்பமில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பது கட்சியின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்று தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.