வாய் துர்நாற்றத்தை தவிர்க்க சில எளிய முறைகள்.
உலகில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய ஒரு தர்மசங்கடமான ஓர் நிலை தான் வாய் துர்நாற்றம். இப்பிரச்சினை உள்ளவர்களால் மற்றவர்களுடன் நிம்மதியாக பேச முடியாது. யாருடனும் சகஜமாக பழக முடியாது. தங்கள் மீது ஓர் அசெளகரிய உணர்வை உணர்வார்கள். அதில் குறிப்பாக ஆண்கள் இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. இதற்கு அவர்களின் முறையற்ற பராமரிப்பு தான் காரணம். பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் அளவில் ஆண்கள் தம்மீது அக்கறை கொள்வதில்லை. ஆம் இந்த வாய் துர்நாற்றத்தலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம்
புதினா இலைகள் வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருட்களில் மிகவும் சிறந்தது. புதினா வாயை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இதற்கு அதில் உள்ள குளோரோபில் தான் முக்கிய காரணம். எனவே அவ்வப்போது புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள்.
வாய் துர்நாற்றம் அதிகம் உள்ள ஆண்கள் எந்த ஒரு உணவை உட்கொண்ட பின்னரும் உப்பு நீரினால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் உப்பு நீரானது வாயில் உள்ள பக்டீரியாக்கள் மற்றும் உணவுத்துகள்களை முற்றிலும் பல்லிடுக்குகளில் இருந்து வெளியேற்றிவிடும். இல்லாவிட்டால், தினமும் காலை மற்றும் இரவில் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
பேக்கிங் சோடாவில் உள்ள ஹைட்ரஜன் பெெராக்ஸைட், வாயில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும். ஏனெனில் வாயில் உள்ள அமிலமானது பக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். பேக்கிங் சோடாவை ஈரமான டூத் பிரஷ்ஷில் தொட்டு, பற்களை துலக்கினால், வாய்த்துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் பளிச்சென்று மின்னும்.
ஆப்பிள் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாயில் தங்கியுள்ள பக்டீரியாக்கள் அழிந்து, வாய்த்துர்நாற்றம் நீங்கும். எனவே வாய்த் துர்நாற்றம் அதிகம் உள்ள ஆண்கள் மட்டுமின்றி பெண்களும், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வருவது நல்லது.
மேலும் வாய் துர்நாற்றத்தைத் நீக்குவதற்கு தயிர் சிறந்ததொன்றாகும். வாய்த் துர்நாற்றத்தினால் அதிகம் கஷ்டப்படுபவர்களாக இருந்தால், தொடர்ந்து ஆறு வாரங்கள் தயிரை சாப்பிட்டு வந்தால் உரிய பலனைப் பெறலாம். விற்றமின் 'சி' அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் பக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். எனவே விற்றமின் 'சி' அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் கெரட் போன்றவற்றை உட்கொண்டு வாருங்கள்.
வாய் வறட்சியுடன் இருந்தால், பக்டீரியாக்கள் நன்கு வளரும். எனவே தொடர்ந்து தண்ணீர் குடித்தால் வாய் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, வாயில் இருக்கும் உணவுத்துகள்கள் அனைத்தும் வெளியேற்றப்படும். தினமும் தவறாமல் 8 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது சிறந்தது.
வாய் துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள், தினமும் சிறிது வேப்பிலையை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்குங்கள். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஈறுகளும் வலிமையடையும்.
மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை முயற்சித்துப்பாருங்கள் உரிய பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.