அமெரிக்காவை தொடர்ந்து லண்டனிலும் பாடசாலைகளில் தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல்
உலக நாடுகளில் தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது. தீவிரவாதிகள் பள்ளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி குழந்தைகளையும், ஆசிரியர்களையும் ஈ.வு. இரக்கமின்றி கொல்கின்றனர்.
சமீப காலமாக அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்திலும் தொடக்க பள்ளி முதல், மேல்நிலைப்பள்ளிகளுக்கு டெலிபோனில் மிரட்டல்கள் வருகின்றன. பள்ளிகளை குண்டு வைத்து தகர்க்க போவதாகவும், குழந்தைகளை தலைதுண்டித்து கொலை செய்யப்போவதாகவும் அச்சுறுத்துகின்றனர்.
அதனால் பெற்றோர்கள் மிகவும் பீதி அடைந்துள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்து ஸ்காட்லாந்து போலீஸ் கூறும் போது. மத்திய இங்கிலாந்து பகுதியில் உள்ள 15 பள்ளிகளுக்கு மிரட்டல்கள் வந்தன. அவற்றில் 2 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மிரட்டல் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவத்துள்ளனர்.