Breaking News

கணவரின் தலையை துண்டித்து கொலை செய்த பெண்..!!

உள­வியல் நிபு­ண­ரான பெண்­ணொ­ருவர் தனது கண­வரின் தலையை துண்­டித்து கொலை செய்­ததுடன் சட­லத்தை துண்­டு­க­ளாக்கி பல்­வேறு இடங்­களில் வீசிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் மெக்­ஸிக்­கோவில் இடம்­பெற்­றுள்­ளது.  40 வய­தான மரியா அல­ஜென்ரா கசோ எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். இவர் தனது கண­வ­ரான அலன் கரேரா கியூலர் (41) என்­ப­ருடன் மெக்­ஸி­கோவின் தலை­ந­க­ரான மெக்­ஸிகோ சிட்­டியில் வசித்து வந்தார்.  தனது கணவர் தன்னை அடித்து துன்­பு­றுத்­தி ­வந்தார் எனவும் இதனால், ஆத்­தி­ர­மடைந்து அவரை தான் கொலை செய்­த­தா­கவும் மரியா கூறி­யுள்ளார். கண­வரின் மதுபானத்தில் உறக்க மருந்­து­களை கலந்­தபின் அவரின் தலையை துண்­டித்து கொன்­றாராம் மரியா. அதன்பின்  பலகை அறுக்கும் கரு­வி­யொன்றின் மூலம் சட­லத்தை துண்­டு­க­ளாக்கி மெக்­ஸிகோ சிட்­டியின் பல்­வேறு இடங்­களில் வீசி­யுள்ளார். உள­வியல் நிபு­ண­ரான பெண்­ணொ­ருவர் இவ்­வாறு தனது கண­வரின் தலையை துண்­டித்து கொலை செய்யத் தீர்­மா­னித்­தமை அதி­கா­ரி­களை வியப்­பி­லாழ்த்­தி­யுள்­ளது.  கரேரா கியூலர் கொல்­லப்­பட்­டதை அவ­ருக்கு நெருக்­க­மா­ன­வர்கள் கண்­டு­பி­டித்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக கியூ­லரின் செல்­லிடத் தொலை­பே­சி­யி­லி­ருந்து அவரின் நண்­பர்­க­ளுக்கும் குடும்­பத்­தி­ன­ருக்கும் குறுந்­த­க­வல்­களை மரியா அனுப்­பி­வந்­தாராம். ஆனால், பூங்­கா­வொன்றில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த சிறார்கள் சிலர் கியூலரின் தலையை கண்­டபின் பொலிஸார் நடத்திய விசாரணைகளை ஆரம்பித்தனர். அதைத் தொடர்ந்து மரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.