Breaking News

சாம்பிராணி என்று கூறிய ரூ.26 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது

சாம்பிராணி என்று கூறி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 26 இலட்சம் ரூபாய் பெறுமதியான 10 கிராம் நிறைகொண்ட போதைப்பொருளையும் 75ஆயிரம் போத்தல்களையும் சுங்க தகவல் தொழிற்நுட்ப மற்றும் தொடர்புபாடல் பிரிவு கைப்பற்றியுள்ளது. பேலியகொடை சுங்க களஞ்சிய பிரிவில் வைத்தே இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று அப்பிரிவு அறிவித்துள்ளது. மருதானையில் உள்ள நிறுவனம் ஒன்றினால் இந்தியா மதுரை நகரிலிருந்து இவை கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவின் ஊடகப்பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.