Breaking News

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட “அகம் “ நிறுவனத்தினால்   மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன .

இதன் கீழ்  “அகம் “ நிறுவனத்தினால்   கிழக்கு பல்கலைக்கழகத்தில்  கல்வி பயின்று வரும்  வவுணதீவு , வெல்லாவெளி ,பட்டிப்பளை , கிரான்  ஆகிய பகுதி பல்கலைக்கழக மாணவர்களில் தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்பு தொகை வழங்கும் நிகழ்வு  இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் .பி எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் இணைப்பாளர்  அ. சுதர்சன் , மட்டக்களப்பு மாவட்ட அகம் நிறுவன இணைப்பாளர்  தங்கராசா திலீப்குமார் , நிறுவன திட்ட இணைப்பாளர்  திருமதி . எஸ்.நிரஞ்சனி மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் .

இந்நிகழ்வில்  கலந்துகொண்ட   கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தாங்கள் முகம் கொடுகின்ற  பிரச்சினைகள் தொடர்பாக  அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர் . 

இதன் போது இவர்கள் முன்வைத்த  பிரச்சினைகளை கேற்றரிந்து கொண்ட அரசாங்க அதிபர் இது தொடர்பாக  உரிய அதிகாரிகளுக்கு  தெரிவிக்கப்பட்டு தீர்வினை பெற்றுத்தருவதாக மாணவர்களுக்கு தெரிவித்துக்கொண்டார்.
(நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்)