தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு.
தேசிய மூன்று வருட உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணமடு பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது .
அதனுடன் இணைந்ததாக இன்று மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக மட்டங்களில் இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இதன் கீழ் இன்று மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக மண்முனைப்பற்று பிரதேச செயலக செயலாளர் வி . வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலகத் தோட்டத்தில் இடம்பெற்றதுடன் அதனை தொடர்ந்து கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளக்காட்டு கிராம பரமலிங்கத்தின் தோட்டத்தில் அறுவடை நிகழ்வும் அதனுடன் இணைந்ததாக விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் மண்முனைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் , பொருளாதார உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் வீட்டு தோட்ட உற்பத்தியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.