அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடல்.
புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவக அனுசரணையில் டயக்கோனியா நிறுவன நிதி உதவியுடன் மட்டக்களப்பு இணையம் நிறுவன ஏற்பாட்டில் புதிய யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்தலும், கலந்துரையாடலும் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது .
அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வுகள் எதிர்வரும் 25ஆம் 26 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது .
இதனை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது .
அரசியல் யாப்பு என்பது இதுவரை காலமும் படித்த பட்டதாரிகள் ,வல்லுனர்கள் மூலமாக எழுதப் பட்டவையாக இருந்தது .
இதனை மாற்றி பாமர மக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தற்போதைய அரசியல் யாப்பினை இவர்களின் கருத்துக்கு இணங்க மாற்றும் நோக்குடனான கலந்துரையாடலில் பாமர மக்களையும் உள்ளடக்கியதாக இந்த கலந்துரையால் இன்று இடம்பெற்றது .
இந்த கலந்துரையாடலில் வளவாலர்களாக எல் .எஸ் .டி . நிறுவக சட்ட ஆலோசகர் கே .ஐங்கரன் , இணையம் நிறுவன ஆலோசகர் எ .சொர்ணலிங்கம் , எகெட் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் வவுணதீவு ,பட்டிப்பளை , செங்கலடி- ஏறாவூர் பற்று , ஆரையம்பதி , எருவில் பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண்கள் அமைப்பின் உறுப்பினர்களும் , பொதுமக்களும் , சர்வமத தலைவர்களும் கலந்துகொண்டனர் .



