Breaking News

புளூட்டோ கிரகத்தில் உறைந்த பனி மலைகளின் புகைப்படத்தினை நாசா வெளியிட்டுள்ளது

புளூட்டோ கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் நியூ ‘ஹொரைசான்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.

அது தற்போது அங்கு தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. புளூட்டோ கிரகத்தை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

சமீபத்தில் அனுப்பிய போட்டோக்களில் அங்கு உறைந்த நிலையில் பனி மலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை அடுக்கடுக்காக பல கிலோ மீட்டர் தொலைவுகளில் அமைந்துள்ளன.

பார்ப்பதற்கு ‘மிதக்கும் மலைகள்’ போன்று பளபள வென்று தோன்றுகின்றன. அதற்கு ‘ஸ்புட்னிக் பிளானம்’ என பெயரிடப்பட்டுள்ளனர்.