Breaking News

கோத்தபாய சொல்லாமல் கொள்ளாமல் அமெரிக்காவுக்கு ஓட்டம்

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் திடீரென அமெரிக்காவுக்குச் சென்றுள்ள இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபாக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் ஆணைக்குழு கோரவுள்ளது.

பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், ஆணைக்குழுவுக்குத் அறிவிக்காமல் திடீரென அமெரிக்காவுக்குச்  கோத்தாபய ராஜபக்ச.சென்றமையால் தமது விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.