Breaking News

கதையில் மாற்றமே பட விலகலுக்கு காரணம்... சாய் பல்லவி

கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாலேயே மணிரத்னம் படத்திலிருந்து விலகியதாக சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார். ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் புதிய பட வேலையைத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தில் துல்கரே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் அவருக்குப் பதில் நானி நடிப்பதாகக் கூறப்பட்டது. கடைசியில் கார்த்தி நாயகனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் இப்படத்தின் நாயகி என பலரின் பேர் அடிபட்டது. இறுதியில் பிரேமம் பட புகழ் சாய் பல்லவி தான் நாயகி என உறுதியானது.