1000 கோடி ரூபாய்க்கு நாட்டை காப்புறுதி செய்தமையால் சேதமான வீடுகளை இலகுவில் மீளமைக்கலாம்
நாட்டை 1,000 கோடி ரூபாய்க்கு அரசாங்கம் காப்புறுதி செய்துள்ளமையால், இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்குள்ளான எவருமே வருந்தவேண்டியதில்லை என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றயதினம் பியகமவில் வெள்ள அனர்த்தினால் பாதிபுற்றவர்களை பார்வையிட்டதன் பின்னர் கருத்துவெளியிடுகையில் தெரிவித்தார். மேலும் அவர் கருத்துரைக்கையில் எவ்வாறாயினும் இக்காப்புறுதி திட்டத்தினூடக மக்கள் இழந்த வீடுகள் தவிர்ந்த ஏனைய சொத்துகள் இக்காப்றுருதியின்மூலம்
இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.