Breaking News

பிளே-ஆப் சுற்று எப்படி?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் லயன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டியிருக்கின்றன.

புள்ளி பட்டியலில் முதல் இரு இடத்தை பிடித்த குஜராத்தும், பெங்களூரு அணியும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணி வெளியேறாது. அந்த அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

அடுத்து புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடத்தை பெற்ற ஐதராபாத்தும், கொல்கத்தாவும் டெல்லியில் நாளை மறுதினம் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் 27-ந்தேதி சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.