Breaking News

போலி கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி ஜப்பான்னில் ஏ.டி.எம்.களில் ரூ.86 கோடி கொள்ளை

ஜப்பானில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஸ்டாண்டர்டு வங்கி வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்கள்   நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையில் டோக்கியோ மற்றும் ஒடிசா நகரங்களில் 24 மணி நேரமும் இயங்க கூடிய ஏ.டி.எம். மையங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.

போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி 1400 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துள்ளனர். சுமார் 3 மணி நேரத்தில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 100 பேர் அடங்கிய கும்பல் கொள்ளையடித்துள்ளது.

ஜப்பான் பணத்துக்கு 1.4 பில்லியன் யென் அதாவது ரூ.86 கோடி  கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  ஏ.டி.எம். எந்திரங்களில் ஒரு கார்டுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். அப்படி இருக்கையில் ஒரே நேரத்தில் இவ்வளவு பணம் மொத்தமாக கொள்ளையடிக்க முடிந்தது எப்படி என்பது குறித்து போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

இவர்கள் சர்வதேச கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களை  கண்டுபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே ஏ.டி.எம்.களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை ஜப்பான் அரசு தெரிவிக்கவில்லை. ஆனால் கொள்ளை சம்பவத்தை ஸ்டாண்டர்டு வங்கி தெரியப்படுத்தியுள்ளது.