Breaking News

ஆர்யாவுடன் மோதும் 50 யானைகள்

மஞ்சப்பை ராகவன் இயக்கும் கடம்பனில் ஆர்யா ஆதிவாசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தாய்லாந்தில் எடுக்கிறார்கள்.  

ஏன்...? தாய்லாந்தில்தான் யானைகள் அதிகம். இந்தியாவில் யானைகள் இருந்தாலும், அவற்றை துன்புறுத்தவில்லை, பட்டினி போடவில்லை, பல் விளக்கவில்லை என்றெல்லாம் வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் ஆயிரத்தெட்டு விளக்கம் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகும் பீட்டா மாதிரி வேலையற்ற அமைப்புகள் கொடைச்சல் கொடுக்கும். 

இந்த எக்ஸ்ட்ரா டென்ஷன் எதுக்கு என்றுதான் தாய்லாந்து. இங்குள்ள யானைப் பண்ணையில் 50 யானைகளை தேர்வு செய்து கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க வைக்கிறார்கள். என்னதான் யானைகள் மனிதர்களுடன் பழகியிருந்தாலும் ஆர்யா யானைகளுடன் பழகியதில்லையே. அதனால், அவரையும் அழைத்துக் கொண்டு யானைகளோடு பழக தாய்லாந்து பறக்கிறார் ராகவன். இந்த வாங்க பழகலாம் செக்ஷன் முடிந்த பிறகே கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

ஆர்யா இந்த ஐம்பது யானைகளையும் தனியாளாக அடித்து துவசம் செய்வது போல் காட்சி வைப்பார்களாக என்றுதான் பதைபதைப்பாக இருக்கிறது