Breaking News

வடக்கு கிழக்கில் உள்ளக இடம்பெர்வுக்கு உள்ளான அகதிகளுக்கு நோர்வே அரசால் 1.1 பில்லியன் உதவி

வடக்கிலும் கிழக்கிலும் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியுள்ள அகதிகளுக்குகென சுமார் 1.15 பில்லியன் ரூபாயை வழங்குவதற்கு நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர விடம் உறுதியளித்துள்ளதாகவும்இவ்வுதவியானது ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினூடாக (UNDP) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிடைக்கப்பெறும் இவ்வுதவியின் மூலம் உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளாகியோரை மீளக்குடியமர்த்தவும் மற்றும் அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் சந்தர்ப்பம் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.