காணாமல் போனோர் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான புதைகுழிகளை தோண்டுவதற்குரிய புதிய சட்டமூலம் அறிமுகம்.
காணாமல் போனதாகக் தெரிவிக்கப்படும் நபர் 'காணாமற்போயுள்ளார் அல்லது இறந்துள்ளார்' என்பதனை காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் முடிவு செய்யுமிடத்து 'இல்லாமைச் சான்றிதழ்' அல்லது இறப்புச் சான்றிதழை வழங்கலாம் எனவும் சந்தேகத்திற்கிடமான புதைகுழிகளை தோண்டுவதற்கான அனுமதியைப்பெற நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம் என புதிதாக பிரதமரால் நேற்று(22) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட காணாமற்போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட மூலத்தில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது தெரிவிக்கப்பட்டுள்ளது.