Breaking News

12 பொலிஸ் பிரிவுகுற்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் ஆலோசனை குழு உருப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல்


(லியோன் )

மட்டக்களப்பு மாவட்டத்தின்   12  பொலிஸ் பிரிவுகுற்பட்ட  பொலிஸ்  உயர் அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் ஆலோசனை குழு உருப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தினேஷ் கருணாநாயக தலைமையில்  21.06.2016 செவ்வாய்க்கிழமை  மட்டக்களப்பு செல்வநாயகம் மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு  மாவட்டத்தின்   12  பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்  சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்படுகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிதாக  மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி ஏற்றுள்ள தினேஷ் கருணாநாயகவின் ஆலோசனைக்கு அமைய  முதல்ஆலோசனை  ஒருங்கமைப்பு  கூட்டம் 21.06.2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது .

 இடம்பெற்ற புதிய பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையிலான ஆலோசனை  ஒருங்கமைப்பு  குழு  கூட்டத்தில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு ஆலோசனை குழு உறுப்பினர்களின் பல பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டது .

இதன் போது முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை உரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகளினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார் .

இடம்பெற்ற ஆலோசனை ஒருங்கமைப்பு குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ,மட்டக்களப்பு மாவட்டத்தின்   12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .