Breaking News

சாலாவ இராணுவ முகாம் வெடிப்புகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் ; 500m இக்குள் வீடுகள் உள்ளவர்கள் வீடுதிரும்பத் தடை !

சாலாவ இராணுவ முகாமின் ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தைதிணை கட்டுப்படுத்த முடிந்துள்ளபோதிலும் அவ்வப்போது வெடிப்புசம்பவங்கள் இடம்பெறுகின்றதால் குறித்த இராணுவ முகாமிலிருந்து 500m சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் வீடுகளுக்கு திரும்பத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.  

மேலும் நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிகையில், சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்து தொடர்பாக விசாரிப்பதற்கு முப்படையின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கபட்டுள்ளதகவும், அதற்கு அவசியமான பொலிஸ் தரப்பு ஒத்துழைப்புகளை வழங்குவதற்கென பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமித்துள்ளதகவும் தெரிவித்துள்ளார்.