ஏறாவூர் செங்கலடி பிரதேச சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புனித இப்தார் நிகழ்வு (VIDEO & PHOTOS)
(லியோன்)
அன்பு அறமும் இணையும் சர்வ மத ஒன்றியத்திற்கு கை கொடுப்போம்
எனும் தொனிப்பொருளில் புனித இப்தார் நிகழ்வு 23.06.2016
வியாழக்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது .
இடம்பெற்ற புனித இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட்
நிறுவகம் இயக்குனர் அருட்பணி ஜெரோம் டிலிமா, மட்டக்களப்பு மாவட்ட சைவ திரு நெறி மன்ற
தலைவர் .எஸ் சிவபிரகாசம் ,
ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர். மௌலவி. எ. டப்ளியு . எம் . ஹாரிஸ் ,சர்வமத ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் கரித்தாஸ்
எகெட் நிருவாக ஊழியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .