உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
(லியோன்)
உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று மாபெரும்
விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது .
மட்டக்களப்பு பிரதேச
மனித உரிமை ஆணைக்குழு இனைப்பாளர் ஜனாப் எ .சி .எஸ் . அஸீஸ் தலைமையில் மட்டக்களப்பு
கல்லடி பேச்சி அம்மன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி கல்லடி பாலம்
வரை இடம்பெற்றது . .
இந்த பேரணியின் போது சித்திரவதைகள் தொடர்பாகவும் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
பதாகைகள் ஏந்தியவாறு பாடசாலை மாணவர்களும் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,
சிறைச்சாலை அதிகாரிகள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .
இதன் போது
சித்திரவதைகள் தொடர்பாக விழிப்புணர்வு
வீதி நாடகமும் இடம்பெற்றது.