மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
(லியோன்)
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த
பரிசளிப்பு விழா 30.06.2016 வியாழக்கிழமை இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பெண்கள் கல்லூரியான மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்
மரியா தலைமையில் இன்று பிற்பகல் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற வருடாந்த
கல்லூரியின் பரிசளிப்பு தின நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை
மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர்
தரத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு
பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
.
கல்லூரியின் வருடாந்த
பரிசளிப்பு தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும்
கல்வி திணைக்கள அதிகாரிகள் , வலயக் கல்விப்பணிப்பாளர்கள், அருட்தந்தையர்கள் ,
அருட்சகோதரிகள் ,கல்லூரி ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , கல்லூரி
அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்