மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்
(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ
மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்த
உற்சவம் 10.07.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு நகரில் வரலாற்று
சிறப்பு மிக்க இருதயபுரம் – மேற்கு
ஸ்ரீ
மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த உற்சவம்
நேற்று காலை மாமாங்கம் அமிர்தகழி
ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணியில் ஆலய பிரதம குரு
சிவஸ்ரீ .இ .திருக்கேதீஸ்வர சர்மா குருக்கள் தலைமையில் 10.07.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 4ஆம்
திகதி ஆரம்பமான வருடாந்த அலங்கார
உற்சவ திருவிழா மஹோற்ஸவ காலங்களில் தினமும் மாலை 06.00 மணிக்கு அபிஷேகம் ,விசேட பூஜைகளும், மூலவர் பூஜை ஆரம்பமாகி சுவாமி வெளிவீதி வலம்
வருதல் நடைபெற்றது
தீர்த்த உற்சவத்தை தொடர்ந்து சுவாமி
ஆலயத்தை வந்தடைந்ததும் திருப்பொன்னூஞ்சல் , மகேஸ்வர பூஜைகள் இடம்பெற்று ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா
நிறைவுபெற்றது


