மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு
(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது .
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 01.07.2016 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
ஆலய திருவிழா திருப்பலி 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அருட்பணி ஆர் .திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன், அருட்பணி மொறாயஸ் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .
09.07.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திருப்பலியும் ,திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளுடன் தொடர்ந்து திரு இருதயநாதரின் திரு உருவம் பவனி .நடைபெற்றது .
திருவிழா திருப்பலி 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு அருட்பணி ஆர் .திருச்செல்வம் அடிகளாரின் தலைமையில் விசேட திருநாள் திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு பெற்றது .


