மட்டு - ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
(லியோன்)
மட்டக்களப்பு ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு
மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு இன்று நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஐயங்கேணி தமிழ்
வித்தியாலயத்தில் கிழக்குமாகான சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள
இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும்
நிகழ்வு பாடசாலை அதிபர் எம் .மனோகரன் தலைமையில் இன்று (22)
வெள்ளிகிழமை நடைபெற்றது .
கிழக்குமாகான சபையால் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு இந்த இரண்டு மாடி கட்டிடம்
நிர்மாணிக்கப்படவுள்ளது .
இன்று நடைபெற்ற அடிக்கல் நாட்டும் நிகழ்வுடன் மாகாண மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு
போட்டி விழா நிகழ்வில் கலந்துகொண்ட இப்பாடசாலை மாணவர்களில் 19 வயதுகுற்பட்ட
ஆண்கள் பிரிவில் சதுரங்க போட்டியில் இரண்டாம் இடத்தினையும் , 15 மற்றும் 19 வயதுக்குற்பட்ட ஆண் ,பெண்
பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற மேசை பந்து போட்டியில் முதல் இடத்தினையும் , 15
மற்றும் 19 வயதுக்குற்பட்ட
பெண்கள் பிரிவில் சதுரங்க போட்டியில்
முதல் இடத்தினையும் பெற்று கிழக்குமாகாணத்தில் ஏறாவூர் பற்று – 01
கல்விக்கோட்டத்தின் ஐயங்கேணி
தமிழ் வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கப்பட்டு வெற்றி கிண்ணங்களும்
வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்
.வியாலேந்திரன் , கிழக்குமாகான சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ,
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா .துறைரெட்ணம் , மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் , பாடசாலை பிரதி அதிபர் ,
ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் , சமுர்த்தி
உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர் .