இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு தேவ நற்கருணை , உறுதிபூடுதல் வழங்கும் விசேட திருப்பலி
(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய பங்கு
மாணவர்களுக்கு தேவ அருள் அடையாளங்கள
வழங்கும் விசேட திருப்பலி 09.07.2016 நடைப்பெற்றது
.மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய
வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இருதயபுரம்
திரு இருதயநாதர் ஆலய பங்கு மாணவர்களுக்கு தேவ நற்கருணை , உறுதிபூடுதல் ஆகிய தேவ அருள் அடையாளங்கள வழங்கும் விசேட திருப்பலி
முன்னாள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப்
கிங்ஸ்லி சுவாமிபிள்ளை தலைமையில் 09.07.2016 சனிக்கிழமை
நடைபெற்றது .
நடைபெற்ற விசேட திருப்பலியில் பங்கு தந்தை அருட்பணி லெஸ்லி ஜெகாந்தன் ,
அருட்பணி எ .தேவதாசன் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர் .
ஆலய திருவிழாவின் திரு உருவம்
பவனி சனிக்கிழமை மாலை நடைபெற்றது .
10.07.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00
மணிக்கு அருட்பணி ஆர் .திருச்செல்வம்
அடிகளாரின் தலைமையில் விசேட திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்படும்