Breaking News

163 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த அவுஸ்ரேலியா!!

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவுஸ்ரேலியா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஏற்கனவே முதல் இரண்டு டெஸ்டுகளில் அவுஸ்ரேலியா தோல்வி அடைந்து இருந்தது.

இந்த நிலையில் கொழும்பில் 3வது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் விளையாடி இலங்கை அணி முதல் இன்னிங்சில் 355 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 379 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

324 ரன் எடுத்தால் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஹெராத் சுழலில் 160 ரன்களில் சுருண்டது. அபாரமாக பந்து வீசிய ஹெராத் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் அவுஸ்ரேலியா 163 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.