Breaking News

மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரி முதல் இடம்.

கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி முதல் இடத்தினை பெற்றுக்கொண்டது.


2016ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடைபெற்ற கூடைப்பந்தாட்டம் , வலைப்பந்தாட்டம், உடற்பயிற்சி ஆகிய விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய கிழக்குமாகாண பாடசாலைகளில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவிகள்  மூன்று போட்டிகளிலும் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டனர்.

இந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் திருகோணமலை, அம்பாறை ,மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில்  நடைபெற்றது.

கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இடத்தினை பெற்று மட்டக்களப்புக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவிகளை  வரவேற்கும் நிகழ்வு  பாடசாலையில் நடைபெற்றது.  


மாகாணமட்டத்தில் முதல் இடத்தினை பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டிகளுக்கு இப்பாடசாலை மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
( என்டன்)