ஆசணங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் அரைச்சொகுசு பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து!
சேவையிலீடுபடும் அரைச்சொகுசு பஸ்கள் ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சந்தர்பங்களில் ஒரே பஸ்சானது 6 மாதங்களுக்குள் மூன்று தடவைக்கு மேலதிகமாக இவ்வாறு ஆசனங்களுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வது சோதனையில் உறுதி செய்யப்பட்டால் குறித்த பஸ்ஸின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் எனவும் பயணிகளிடம் இருந்து கிடைக்க பெற்ற முறைப்பாடுகள் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்துள்ளார்