சமுர்த்தியானது வினைத்திறன்மிக்கவாறு மாற்றப்படும்; ஜனாதிபதி
கடந்த ஆட்சியின்போது ஊழியர்களின் எதிர்பார்ப்புகளானது ஏமாற்றத்துக்குள்ளான வகையில், திருப்தியற்ற சேவையினை வழங்கும் ஓர் அரச நிறுவனமாக மாறியுள்ள சமுர்த்தி இயக்கத்தினை மிகவும் வினைத்திறனுடன் கூடிய சேவையினை வழங்கும் நிறுவனமாக மாற்றியமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்றயதினம் (23) ஜனாதிபதி அலுவலகத்தில் முகாமையாளர்களின் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.