Breaking News

3 ஆயிரம் ஆண்டுகளாக பேய் திருமணத்துக்கு பெண்களை பலியிடும் சீனா !!!

சீனாவில் பழமையான கிராமம் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பேய் திருமணம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தில் யாராவது திருமணம் ஆகாமல் இறந்துவிட்டதால், அது துரதிர்ஷ்டவசமானது என்று அந்த குடும்பத்தால் கருதப்படுகிறது.

இதனால், யாராவது பெண்கள் இறந்து விட்டால் அவர்களின் உடல்களை வாங்கி, இறந்து போன வாலிபரின் கல்லறைக்கு அருகில் வைத்து திருமண சடங்குகளை நடத்தி விட்டு, அதன் பின்னர் அடக்கம் செய்து விடுகின்றனர். இந்த மூடப்பழக்கவழக்கம் கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்காகவே, இறந்துபோன பெண்களின் உடல்கள் கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அதிர்ச்சியளிக்கும் விசயம் என்னவென்றால், இதற்காக சில பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர் என்பது தான்.

இதற்காக ஊனமுற்ற பெண்களை, 2 நபர்கள் சேர்ந்து கொலை செய்து சந்தையில் விற்பனை செய்துள்ளது போலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.