Breaking News

கிழக்கைச் சுத்தப்படுத்துவோம் செயற்திட்டத்தின் பசுமைப் புரட்சி !!

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமதினால்  உருவான உள்ளுராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத் திட்டங்கள் கடந்த வாரங்களில் இருந்து கிழக்கின் சகல பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது. இதன் ஒருகட்டமாக முதலமைச்சரின் பங்கு பற்றுதலுடன்  ஏறாவூர் நகர சபைப் பகுதியில் பசுமைப் புரட்சியாக மரம் நடல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சித்திரவேல், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் உதயகுமார், ஏறாவூர் நகரசபைச் செயலாளர் எம்.ஹமீம், வெளிநாட்டு முத்லீட்டாளர்களில் ஒருவரான வீ.ஜி. ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டடனர்.