Breaking News

நாட்டின் சுதந்திரம் ஜனநாயகத்தை பாதுகாப்பாது போல நிதி நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்போம் ஜனாதிபதி.

நாட்டின் சுதந்திரம் மற்றும் மக்களின் ஜனநாயகத்தை பாதுகாப்பாது போல எமது நாடு எதிர் கொள்ளும் நிதி நெருக்கடியில் இருந்தும் நாட்டை மீட்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

'புதிய நாடு ஒரே பயணம்' என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நேற்று (19) இடம்பெற்றது. சிலர் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தேசிய அரசாங்கம் மக்களுக்கு என்ன செய்துள்ளது என கேள்வி எழுப்புகிறார்கள்.

இவ்வாறு கேள்வி எழுப்புவர்களுக்கு தாம் தெரிவிக்க வேண்டியது, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டுள்ளதுடன், மக்களுக்கான சுதந்திரத்தையும் வழங்கி ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.