கொட்டாஞ்சேனையில் ஒரேகும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் சடலமாக மீட்பு !
கொட்டாஞ்சேனையிலுள்ள பெனடிக் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர். இவர்கள் மூவரும் நஞ்சு உண்டிருக்கலாம் அல்லது உணவில் நஞ்சூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.