Breaking News

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் 21 வயதேயான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து நெகிழ்ச்சி

ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி. சிந்துவுக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்து கொண்டிருக்கின்றன. உலகின் நம்பர் 1 வீராங்கனையிடம் போராடி தோல்வியுற்றது, ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

ரியோ டி ஜெனிரோ நகரில் வெள்ளி பதக்கத்தை வென்றுவிட்ட மகிழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். இந்த நாளை என்னால் எப்பொழுதும் மறக்க முடியாது.

மேலும், என்னுடைய போட்டியை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்த ரசிகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த பதக்கத்தை என்னுடைய பயிற்சியாளருக்கும், பெற்றோருக்கும் அர்ப்பணம் செய்கின்றேன்.

என்னுடைய பயிற்சியாளர் கோபிசந்த், என்னைவிட அதிகமான அளவில் உழைப்பு செய்தார். என்னையும் கடின உழைப்புக்கு தூண்டினார். நான் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் சிந்து.