Breaking News

குடிவரவு – குடியகல்வு திணைக்கள சேவைகள் இன்று முதல் பத்தரமுல்லையில் ஆரம்பிரிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் இசுருபாயவிலுள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்திற்கு குடிவரவு – குடியகல்வு அலுவலகம் மாற்றப்பட்டமையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனினும் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்ளும் ஒருநாள் சேவையானது இன்றைய தினம் வழங்கப் படமாட்டாது எனவும் ஆனால் பிராந்திய அலுவலகங்களான கண்டி மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய அலுவலகங்களின்  சேவைகளும் வழமைபோன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.