Breaking News

இணையதளத்தில் தரவேற்றம் செய்த தனது போட்டோவை பார்த்து தற்கொலை செய்து கொண்ட மாணவி

பிரிட்டனில் மாணவி ப்போபி கோன்ப் (16). இவர் இணையதளம் வாயிலாக ஆசியாவை சேர்ந்த ஆணுடன் உரையாடி வந்துள்ளார். அவரை நேரில் சந்திக்கவில்லை. ஆனாலும் அவரை தனது காதலன் என்றே நண்பர்களிடம் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது காதலனின் பெற்றோரிடம் சம்மதம் வாங்குவதற்காக இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் தனது வெள்ளை நிறமாக இருக்கும் தனது முகத்தை கருப்பு நிறமாக மாற்றி பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது புகைப்படம் இனவெறியை தூண்டும் வகையில் இருக்கிறது என்று அச்சம் கொண்டுள்ளார். மேலும் புகைப்படத்தால் தனது வீட்டின் அருகாமையில் வசிக்கும் ஆசிய நாட்டினரின் எதிர்ப்பினை எதிர்கொள்ள நேருமோ என அச்சம் கொண்ட மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.