Breaking News

காணிகளை முழுமையாக விடுவிப்பது சாத்தியமற்றது கீரிமலையில் கட்டளை தளபதி சேனாநாயக்க !

கீரிமலை பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தின் பயனாளிகளுக்கு உறுதி படுத்தப்பட்ட கடிதம் வழங்கும் நிகழ்வானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை யன்று கீரிமலை பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்டளை தளபதி சேனாநாயக்க ''பலாலி மற்றும் வசாவிளான் விமான நிலைய சந்தியை அண்மித்த பகுதிகள், விமான நிலைய விரிவாக்கலுக்காக மூன்றாம் கட்டமாக மதிப்பீடு செய்யுப்படவுள்ளது எனவும் குறித்த பகுதிகளில் உள்ள மக்களின் காணிகள் விடுவிப்பது சாத்தியமற்றது' எனவும் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.