Breaking News

வார்ணரை கிண்டல் செய்த பெரேராவுக்கு 15 சதவீதம் அபராதம் !!

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவின் முதல் ஆட்டக்காரரான டேவிட் வார்ணர் விக்கெட்டை கைப்பற்றிய போது இலங்கை வீரரான திசாரா பெரேரா வாரணரை கிண்டல் செய்யும் விதமாக சைகை காட்டி விக்கெட் எடுத்ததை கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம் பிரேரா ஒழுங்கு விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக கூறி பெரேராவின் போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதே போட்டியில் ரன் எடுக்காமல் நின்று கொண்டிருந்த போதே இலங்கை வீரர் சந்திமால் மீது பந்தை எரிந்த  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டார்க்கிற்கும் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.