Breaking News

எம்நாட்டவரும் லைகா நிறுவனத்தின் நிர்வாகத்தலைவருமான ராஜூ மகாலிங்கம் இன்று கமலை நேரில் சந்தித்து பாராட்டு !!

செவாலியே கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் எம்நாட்டவரும் லைகா நிறுவனத்தின் நிர்வாகத்தலைவருமான ராஜூ மகாலிங்கம் இன்று கமலை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது டுவிட்டரில் 'கமலுக்கும் எனக்கும் உள்ள உறவு தந்தை-மகன் உறவு என்றும் தெரிவித்துள்ளார்.  இதே லைகா நிறுவனம்தான் ரஜினியின் '2.0', கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு', சிரஞ்சீவியின் 'கைதி நம்பர் 150' உள்பட பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.