இரண்டாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடையச்செய்தனர் எம் வீரர்கள் !!
கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று கொழும்பில் இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது.
டாஸில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியை இலங்கை அணி 48.5 ஓவர் முடிவில் 288 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மெண்டிஸ்(69) ரன்களும் கேப்டன் மேத்யூஸ்(57) ரன்களும் எடுத்திருந்தனர். அவுஸ்திரேலிய அணி சார்பில் ஃபால்க்னர் ,ஸ்டார்க் மற்றும் ஜாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னரும், ஃபின்சும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் சோபிக்க தவறவேஅவுஸ்திரேலிய அணி 47.2 ஓவரில் 206 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததுஅவுஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வேட் மட்டும் 76 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. பவுலிங்கில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக அபோன்சா 4 விக்கெட்டுகளையும், பெரேரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.