Breaking News

இத்தாலி நிலநடுக்க இடிபாடுக்குக்கிடையில் 17 மணித்தியாலங்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 10 வயது சிறுமி !

இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், Pescara del Tronto என்ற நகரையே புரட்டிப்போட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 159 பேரின் உயிரை காவு வாங்கியது. நகரமே சின்னாபின்னமாகியது. இந்நிலையில் அதிசயம் ஒன்றும் அங்கு நிகழ்ந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் போது, 10 வயது சிறுமி ஒருவரை இறந்துவிட்டதாக கருதி  மீட்புப் படையினர் கைப்பற்றினர். அப்போது, ஒரு வீரர் “இவள் உயிரோடு இருக்கிறாள்” என கத்தினார். உடனே அனைவரின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. அந்த சிறுமியை பரிசோதித்தபோது, உயிர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.