Breaking News

20 மில்லியன் கப்பம் கோரி பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சுலைமான் மாவனல்லையில் சடலமாக மீட்பு !!

மொஹமட் ஷகீம் சுலைமான்மான் எனும் 29 வயதுடைய வர்த்தகர் கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமயன்று இரவு, பம்பலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு அருகாமையில் வைத்து காணாமல் போனதுடன் அவரினது தந்தையாரிடம் தொலைபேசியில் 20 மில்லியன் கப்பம் கோரபட்டதாக அவரின் உறவினர்கள் பொலிஸில் முறைபாட்டினை செய்த்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய போலீசார் மோப்பநாய்கள் சகிதம் அப் பகுதியில் நடத்திய தேடுதலின் பொது  சுலைமான் அணிந்திருந்த கைக்கடிகாரம் இரத்தக்கறைகளுடன் மீட்கப்பட்டிருந்தது மேலும் போலீசார் குறித்த வர்த்தகரின் புகைப்படத்தினை வெளியிட்டதுடன் பொதுமக்களின் உதவியையினையும் நாடியிருந்தனர்.

எனினும் மாவனல்ல ஹெம்மாத்தகமவில், பகுதியில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம், பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகர் சுலைமானுடையது என்று சடலத்தை அவருடைய உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.