3 வயது குழந்தையை நீச்சல் குளத்தில் வீசி கொன்றவருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை!!
மெக்சிகோவில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஜோஸ் டேவிட் என்பவர் தனது மனைவியின் முதல் கணவர் குழந்தையுடன் விளையாடி கொண்டு இருந்தார். நீச்சல் குளத்தில் குழந்தையை வீசி வீசி விளையாடி கொண்டு இருந்தார்.
அந்த குளத்தில் இருந்து வெளியேற பல முறை அந்த குழந்தை முயன்ற போதும் அந்த நபர் விடவே இல்லை, ஒரு கட்டத்தில் குழந்தையை நீருக்குள் அமிழ்த்தி அதற்கு மூச்சு முட்டும் வரையில் நடந்துள்ளார்.
இதனிடையே குழந்தையை காணவில்லை என தேடிய அதன் தாயாருக்கு குழந்தையின் இறந்த உடலை மட்டுமே மீட்க முடிந்தது.
குறிப்பிட்ட ஹொட்டலின் கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வந்தது. வீடியோ காட்சிகளை பார்த்த பின்னர் நீதிபதி, குறிப்பிட்ட நபருக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என கருதி 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார்.