40 மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் பொலிபியாவை சேர்ந்த பெண் கைது !!
நேற்றைய தினம் (12) பொலிபியாவை சேர்ந்த பெண் ஒருவர் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோஇன் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற வேளையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் போதைப்பொருளை பயணப் பொதியினுள் மறைத்து வைத்து கடத்த முயன்ற சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் இவர் குறித்த பெண் ஏற்கனவே தென்னாபிரிக்காவிலும் போதைப் பொருள் கடத்தலில் தண்டனை அனுபவித்துள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது.