பதியபடாத இணையத்தளங்களை முடக்குவதற்கு நடவடிக்ககை !
அனைத்து இணையத் தளங்களையும் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்தவாரம் ஜனாதிபதிக்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதியப்படாத இணையத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தினை தயாரிக்குமாறு ஜனாதிபதி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக அறியமுடிகிறது.